Saturday 6 August 2016

உரிமைகளை இழக்க மாட்டோம்! : பேரா.ஜவாஹிருல்லா கடும் எச்சரிக்கை!


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நேற்று (05.08.2016) தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா ஜவாஹிருல்லாஹ் அவர்கள், இன்னும் ஒரு மாதத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை வரவிருக்கிறது. அதில் முஸ்லிம்கள் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுப்பார்கள். இது அரசியல் அமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை. எனவே இந்த உரிமையில் குழப்பம் விளைவிப்பவர்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் தடுக்க வேண்டி வரும் என்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அரசுக்கு தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் சில இடங்களில் கோ ரக்ஸா தள் என்ற அமைப்பு பிரச்சினை செய்தனர். குறிப்பாக செங்கல்பட்டு டோல்கேட் அருகே மாடுகளை தடுத்து நிறுத்தினர். அப்போது அச்சிருப்பாக்கம் ஷாஜஹான் தலைமையில் தமுமுக சகோதரர்கள் களமிறங்கினார்கள். போராட்ட அறிவிப்பும் சாலை மறியல் அறிவிப்பு மூலமாக கடுமையான எச்சரிக்கை செய்தவுடன் காவல்துறை தலையிட்டு மாடுகளை மீட்டுக் கொடுத்ததுடன் கோ ரக்ஸா தள் அமைப்பினர் பிரச்சினையை பெரிதாக்க ஒரு மாட்டை சூழ்ச்சியாக கொன்றனர். அதற்கும் இழப்பீடு வாங்கியும் தந்தனர். மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப் வழிகாட்டுதலில் இப்பிரச்சினையை ஷாஜஹான் வீரியமாக்கியதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அதனால், அது போன்ற பிரச்சினைகள் இவ்வருடம் வரக்கூடாது என்ற காரணத்தினால் தான் பேரா. ஜவாஹிருல்லா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு தடுக்குமா? அல்லது வேடிக்கை பார்க்குமா என்பது அடுத்த மாதம் தெரியும்.

Monday 25 January 2016

தாம்பரத்தில் மாபெரும் இரத்ததான முகாம்

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் தமுமுக சார்பாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.



Saturday 28 November 2015

தாம்பரத்தில் தமுமுக மற்றும் மமக செயல்வீரர்கள் கூட்டம்



காஞ்சி வடக்கு மாவட்டம், தாம்பரம் பெருநகரம் தமுமுக மற்றும் தமுமுக சார்பாக 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் எஸ்ஜிஎஸ் மஹாலில் நகர செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக நகர செயலாளர் ஆ. ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் கௌஸ்பாஷா கிராத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது இக்பால் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சலீம்கான், மாநில அமைப்புச் செயலாளர் சகோ. யாக்கூப் அவர்கள், பேரா. ஹாஜா கனி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். டிசம்பர் 6 அன்று பல்லாவரத்தில் நடைபெற உள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெறும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி பேச்சாளர்கள் விளக்கி பேசினார்கள். இந்நிகழ்வில் நகர பொருளார் ஷேக் மொய்தீன், மாவட்ட செயலாளர் அப்துர் ரவூப், இப்றாஹிம், அக்பர், தமீம் அன்ஸாரி உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர பொருளாளர் ஷேக் மொஹிதீன் நன்றியுரை ஆற்றினார்.

தாம்பரத்தில்பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

தாம்பரத்தில் தமுமுக சார்பாக பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு 27.11.2015 மாலை 6.30 மணிக்கு தாம்பரம் எஸ்.ஜி.எஸ். மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை சகோதரி. சுபைதா பேகம் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார். சகோதரி. மெக்ராஜ் பாத்திமா ஆலிமா அவர்கள், "இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியை தாம்பரம் நகர தமுமுக மற்றும் அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மைய நிர்வாகிகள் ஆசாத் காமில், கவுஸ்பாஷா, அஹமது ராஜா, முபாரக் அலி, தமீம் அன்ஸாரி, அமீனுதீன், ஆசிக் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக பங்கு கொண்டனர்.

Sunday 22 November 2015

தாம்பரத்தில் தமுமுகவின் மனிதநேய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்

தாம்பரம் நகரம் சார்பாக பேரிடர் மீட்பு பணிகள்

தாம்பரத்தில் 14.11.15 அன்று பெய்த கன மழையின் போதே நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. முதல் கட்டமாக 15.11.2015 அன்று தமுமுக நகர அலுவலகத்தில் நகர செயலாளர் ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்ற மாணவரணி மற்றும் தமுமுக செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் செய்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவரணியினர் மற்றும் நகர நிர்வாகிகள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். பின் பாதிக்கப்பட்ட இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து முகநூலில் "தாம்பரம் நகராட்சியின் கவனத்திற்கு" என்று பதிவிட்டு நகராட்சியை பணியாற்ற முடுக்கினர்.
  

இரண்டாம் கட்டமாக மாநில அமைப்புச் செயலாளர்சகோ. யாக்கூப் அவர்கள் தென்காசி பொதுக்கூட்டம் முடித்து 16.11.2015 தாம்பரம் வந்தவுடன் மீட்பு பணிகளை செய்ய தமுமுக பேரிடர் மீட்பு குழுவை அமைத்து பணிகளை விரைவு படுத்தினார். அவரது ஆலோசனையின் படி கோவளத்திலிருந்து சகோ. கோவளம் யாக்கூப் அவர்களிடமிருந்து 30 பேர் அமரக்கூடிய வகையிலான பெரிய படகு ஒன்றையும் அதை இயக்க கோவளம் யாக்கூப், சௌகத் அலி, சாகுல்ஹமீது, அன்சர் தீன் ஆகிய கடலோடிகளையும் நகர நிர்வாகிகள் அழைத்து வந்தனர். 

தாம்பரத்திற்கு படகு வந்தவுடன் தயாராக இருந்த தமுமுக பேரிடர் மீட்பு குழுவினர் டார்ச் லைட் உதவியுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படகை செலுத்தினர். ஆசாத்காமில்,நிஜாம்தீன், ஹீதா(Hudha), அக்பர் ஆகியோர் படகுகளில் சென்று இரவு முழுவதும் பெரியார்நகர், கிஷ்கிந்தா, அம்பேத்கர் நகர் தர்காஸ் போன்ற பகுதிகளில் உள்ள மக்களை மீட்டனர். இரவு முழுவதும் பேரிடர் மீட்பு தமுமுக குழுவினர் இடுப்பளவு தண்ணீரில் நின்று மீட்ட மக்களை படகிலிருந்து இறக்கி அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு ஒரு குழு அழைத்து சென்றனர்.



மாநில அமைப்புச் செயலாளர் யாக்கூப் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜாஹிர் உசைன் ஆகியோர் இரவில் தண்ணீரில் நின்று கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தியும், அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

மீட்பு பணியின் போது சில இடங்களில் இரவு 2.00 மணியளவில் பிஞ்சுக்குழந்தைகளுடன் இருந்த தாய்களையும் முதியவர்களையும் மீட்டெடுத்தது மறக்க முடியாத நிகழ்வாகும். 

காலை 10.00 மணிக்கு இராணுவம் மீட்பு பணிக்காக வந்தபோது அவர்களுக்கும் தமுமுக தொண்டர்கள் உதவி செய்தனர். 

16.11.15இரவிலிருந்து அடுத்தநாள் 17.11.15 நன்பகல் 12.15 வரை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை முடித்துவிட்டு பின் முடிச்சூர் பகுதிகளில் மீட்பு பணிக்காக படகை லாரியில் ஏற்றிச் சென்று அங்கு நிறைய மக்களை மீட்டெடுத்தது தாம்பரம் மக்களின் மனதில் தமுமுகவிற்கு தனியிடம் பெற்றுத்தந்தது என்பதை மறுக்க இயலாது. அடித்தட்டு மக்கள் முதல் அப்பார்ட்மெண்ட் மக்கள் வரை அனைவரையும் மீட்டெடுத்ததில் தமுமுக என்றும் அனைத்து மக்களுக்குமான இயக்கம் என்பதை மீண்டுமொருமுறை நீருபித்தது. 


வரதராஜபுரம் பகுதியில் குதாவும், நிஜாமும் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி துணிச்சலாக செயலாற்றினர். அங்கு தண்ணீரே சாக்கடையுடன் கலந்திருந்தது சில இடங்களில் ஆழம் அதிகமாக இருந்தது. இருப்பினும் இருவரும் துணிச்சலுடன் களமிறங்கி மீட்பு பணி செய்தனர். அதே போல் கோவளம் சகோதரர்கள் நால்வரும் படகை லாவகமாக இயக்கி எல்லாவிதமான சிக்கலான சூழலையும் சமாளித்து படகை செலுத்தினர். இறைவன் அவர்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக. 


தாம்பரம் நகரம் சார்பாக வெள்ள நிவாரணப் பணிகள்


17.11.2015 மாலை மமக மாநில அமைப்பு செயளாலர் சகோ. யாக்கூப் அவர்கள் தலைமையில் தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் ஒரு பகுதியான கன்னடபாளையம் பள்ளிக்கூடத்தில் ரூபாய் 1 இலட்சத்திற்கும் அதிகமான செலவில் லுங்கிகள், சேலைகள், போர்வைகள்,பழங்களை மமக மாநில தலைவர் பேரா,ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் வழங்கினார்.

அதேபோல் 19.10.2015 அன்று காஞ்சி வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம் சார்பாக தமுமுக, மமக சார்பாக, தாம்பரம் பகுதியில் சேவாசதன் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு1இலட்சத்து 50,000 ரூபாய் செலவில்1200 போர்வைகள், உடைகள் ஆகியவற்றை வெள்ள நிவாரண உதவியாக மமக மாநில அமைப்பு செயலாளர் சகோ. யாக்கூப் தலைமையில், மமக மாநிலப் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் வழங்கினார்கள்.


உதவும் உள்ளத்திற்கு உதவிய தமுமுக


தாம்பரத்தில் இயங்கிவரும் தொண்டுநிறுவனமான "உதவும் உள்ளம்" மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால்அவர்கள் தற்காலிகமாக பேபி உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமுமுக சந்தித்த போதுஅந்த இல்லத்தின் நிர்வாகி கண்ணியமிகு. துறைமுக லட்சுமி அவர்கள் சகோ. யாக்கூப் அவர்களிடம் அடிப்படைத் தேவைகளை கூறினார்.உடனடியாக அவர்களுக்கு டூத் பிரஷ், பக்கெட்டுகள், குவளைகள், போர்வைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடைகள் என ரூபாய் 85,000க்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது


பிரியாணி வழங்கிய மாணவர்கள்!


தாம்பரத்தில் பேபி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் "உதவும் உள்ளம்" தொண்டு நிறுவன குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் சைவ உணவுகளை தாம்பரம் நகர தமுமுக மற்றும் மாணவர் இந்தியா மாணவர்கள் வழங்கினார்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தமுமுக மாணவரணி நகர செயலாளர் ஆசிக் ஹமீது உட்பட நகர மாணவரணி சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

மமக மாநில அமைப்பு செயளாலர் சகோ. யாக்கூப் அவர்கள் தலைமையில் நடந்த நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் தமுமுக மாவட்ட செயளாலர் அப்துல் ரவூப், தமுமுக மாவட்ட பொருளாளர் ஜாஹிர் ஹுசைன்,மமக மாவட்ட செயலாளர் சலீம்கான்,தொணடரணி செயலாளர் S.R.A.இப்ராஹிம்,தாம்பரம் நகர செயளாலர் A.ஆசாத் காமில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் N.Kஅக்பர்,முன்னால் நகர தலைவர் S.முஹம்மது இக்பால்,மாவட்ட மாணவர் இந்தியா செயளாலர் தமீம் அன்சாரி நகர துணைச் செயலாளர்கள் அமீனுதீன், ஷாஜஹான், நகர இளைஞரணி செயலாளர் அப்துல்ரஹ்மான், மாணவரணி செயலாளர் ஆசிக் ஹமீது மற்றும் நகர,வார்டு,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

Thursday 19 March 2015

மாவட்ட செயலாளராக சகோதரர் யாக்கூப் நியமனம்!

தமுமுக மாவட்ட செயலாளராக 
சகோதரர் யாக்கூப் நியமனம்!


தமுமுகவின் மாநில பொதுக்குழு வேலூரில் கடந்த 07.03.15 அன்று நடந்தது. பொதுக்குழுவிற்கு பின்னர் மாவட்ட செயலாளர்களை மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் அறிவித்தார். இது வரை தேர்தல்கள் மூலமே மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் முதன்முறையாக மாநில தலைமையே இனி மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் என்ற முடிவை தலைமை எடுத்தது. அதன் படி இது வரை தேர்தல் மூலமாக மாவட்ட செயலாளராகவும், மாவட்ட தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட சகோ. எம். யாக்கூப் அவர்கள் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளராக தலைமை நியமித்தது.
வாழ்த்தும், வருத்தமும்
சகோ யாக்கூப் அவர்களுக்கு மாநில செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்பது மாவட்ம் முழுவதும் உள்ள இயக்க சகோதரர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதால் இயக்க சகோதரர்கள் வருத்தமடைந்துள்ளனர். வருத்தமுடனே அனைவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். மாவட்ட தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களால் மாநில செயலாளராக இவர் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இம்முறை பலமாக எழுந்துள்ளது. 

மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சகோ. யாக்கூப் அவர்களுக்கு தமுமுக தாம்பரம் நகரம் சார்பாக நகர செயலாளர்        ஆ.ஆசாத்காமில் வாழ்த்துக்களை தெரிவித்தார். தமுமுக தாம்பரம் நகரம் சார்பாக யாக்கூப் அவர்களை மாநில செயலாளராக நியமிக்க கோரி நகர பொதுக்குழு தீர்மானத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளது.

சகோ. யாக்கூப் கடந்து வந்த பாதை
இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 1995 முதலே இயக்கத்தின் உறுப்பினராகவும், கிளை, நகரம், பின்பு மாவட்ட தொண்டரணி செயலாளர், மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் என அவரது படிநிலை வளர்ச்சி மீண்டும் மாவட்ட செயலாளராக வந்து உள்ளது. சிறந்த சமூகப் போராளி. சமுதாயப் பிரச்சினைகளுக்காக 4 முறை நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தார். தடா வழக்கில் 5 ஆண்டுகள், பாளையங்கோட்டையில் மூத்த தலைவர் சகோ. ஹைதர் அலியுடன் சிறைவாசம், அதே போல் நபிகள் நாயகத்தை கேளி செய்த அமெரிக்க ஊடக பயங்கரவாதத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை அமெரிக்க துணை தூதரகம் மக்களின் தன்னெழுச்சியான தாக்குதல் காரணமாக 19 பேர் கைது செய்யப்பட்டனர் அதில் சகோ. யாக்கூப் அவர்களும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறைக்கு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 
தாம்பரத்தில் இரண்டு மாநில செயற்குழு, மாநில பொதுக்குழு, மாவட்ட மாநாடு, மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு  தமுமுகவின் வரலாற்றில் தாம்பரத்தை விட்டு விட்டு வரலாற்றை பதிவு செய்ய இயலாத வண்ணம் இவரது பணிகள், இயக்கச் சகோதரர்களை அரவணைத்து செல்லும் போக்கு என மாவட்ட நிர்வாகத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக கட்டமைத்து செயலாற்றியுள்ளதை பிற மாவட்ட இயக்கச் சகோதர்கள் பாராட்டும் அளவிற்கு இவரது பணிகள் இருந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
மென்மேலும் இவரது பணிகள் சிறக்க அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக.